பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி தாராபுரத்தில் விவசாயிகள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

பிஏபி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடாத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து பொன்னாபுரம் பிரிவு என்ற இடத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியில் ருத்ராவதி, செங்காளிபாளையம், கணபதிபாளையம், சுங்கிலியம்பாளையம் உள்ளிட்ட பி.ஏ.பி. பாசனம் பெறும் பகுதிகளுக்கு கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு முதல் சுற்று தண்ணீர் விடப்பட்டது. முதல் சுற்று தண்ணீர் குறிப்பிட்ட கால இடைவெளியில் விடப்பட்ட நிலையில், 2-வது சுற்று தண்ணீர் இதுநாள் வரை திறக்கப்படாததால் முதல் சுற்று தண்ணீரை நம்பி பயிர்செய்த விவசாயிகள் தொடர்ந்து செய்த பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் போனது.

இதனால் பயிர்கள் கருகிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி குண்டடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் முறையிட்டு விரைந்து தண்ணீர் திறக்கக் கோரியும் பொதுப்பணித்துறையினர் செவி சாய்க்காத காரணத்தினால் நேற்று முன்தினம் பி.ஏ.பி. பாசனம் பெறும் ஆயக் கட்டு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் யாரும் வராத நிலையில் பல்லடம் பொதுப்பணித்துறை எஸ்.டி.ஓ.நேரில் வந்து விவசாயிகளிடையே பேசினார்.



அப்போது விரைந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் பொதுப்பணித்துறை அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் இன்று தாராபுரம் கோவை மாநில நெடுஞ்சாலையில் பொன்னாபுரம் பிரிவு என்ற இடத்தில் விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோர் பிஏபி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடாத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பேருந்தில் கல்லூரி செல்வதற்காக காத்திருந்த மூன்று மாணவிகளை விவசாயிகள் காரில் அழைத்துச் சென்று பல்லடம் பேருந்து நிலையத்தில் மூன்று மாணவிகளை விவசாயிகள் இறக்கி விட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...