கோவையில் உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவஞ்சலி - நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை

கோவை மண்டல இணை இயக்குனர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீயணைப்பு நிலையத்தில் உள்ள நினைவு தூணில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் தீயணைப்பு வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.


கோவை: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் ஆண்டு தோறும் ஏப்ரல் 14ம் தேதி தீ தொண்டு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதில், தீயணைப்பு துறையில் மீட்பு பணியின் போது உயிரிழந்த வீரர்களின் நினைவாக அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இதேபோல், இன்று (ஏப்ரல்.14) காலை கோவை ரயில் நிலையம் ரோட்டில் உள்ள தெற்கு தீயணைப்பு நிலையத்தில் உயிர் நீத்தாருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கோவை மண்டல இணை இயக்குனர் சரவணகுமார் தலைமை வகித்தார்.



அப்போது அவர் தீயணைப்பு நிலையத்தில் உள்ள நினைவு தூணில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.



இதேபோல், தீயணைப்பு வீரர்களும் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் புலுகாண்டி, உதவி அலுவலர்கள் அழகர்சாமி, ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து இன்று முதல் வருகிற 20ம் தேதி வரை தீ தொண்டு நாள் அனுசரிக்கப்படுவதால் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட உள்ளது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...