கோவையில் உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவஞ்சலி - நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை

கோவை மண்டல இணை இயக்குனர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீயணைப்பு நிலையத்தில் உள்ள நினைவு தூணில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் தீயணைப்பு வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.


கோவை: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் ஆண்டு தோறும் ஏப்ரல் 14ம் தேதி தீ தொண்டு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதில், தீயணைப்பு துறையில் மீட்பு பணியின் போது உயிரிழந்த வீரர்களின் நினைவாக அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இதேபோல், இன்று (ஏப்ரல்.14) காலை கோவை ரயில் நிலையம் ரோட்டில் உள்ள தெற்கு தீயணைப்பு நிலையத்தில் உயிர் நீத்தாருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கோவை மண்டல இணை இயக்குனர் சரவணகுமார் தலைமை வகித்தார்.



அப்போது அவர் தீயணைப்பு நிலையத்தில் உள்ள நினைவு தூணில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.



இதேபோல், தீயணைப்பு வீரர்களும் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் புலுகாண்டி, உதவி அலுவலர்கள் அழகர்சாமி, ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து இன்று முதல் வருகிற 20ம் தேதி வரை தீ தொண்டு நாள் அனுசரிக்கப்படுவதால் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட உள்ளது.

Newsletter

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...

தொண்டாமுத்தூரில் AIADMK வேலுமணி வேட்புமனு: அண்ணாமலை உடன் தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் S.P. வேலுமணி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். BJP முன்னாள் மாந...

தொண்டாமுத்தூர்: N.R. கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் N.R. கார்த்திகேயன், பேரூர் தாலுக்கா அலுவலகத்தில் வேட...

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...