தோற்றாலும் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் இயக்கம் அதிமுக - பல்லடத்தில் சிங்கை ராமச்சந்திரன் பிரச்சாரம்

அதிமுக அரசின் திட்டங்களை எடுத்து கூறியும், மதவாத பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை சொல்லியும் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


திருப்பூர்: கோவை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இவர் இன்று (ஏப்ரல்.12) பல்லடம் தொகுதிக்குட்பட்ட குள்ளம்பாளையம் பெருமாள் கோயில், வாவிபாளையம், மந்திரிபாளையம், கேத்தனூர், எலவந்தி, வடுகபாளையம், துத்தாரிபாளையம், வலையபாளையம், புத்தரச்சல், கெங்கநாயக்கன்பாளையம், திருமலை நாயக்கன்பாளையம், காட்டூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களை நேரில் சென்று சந்தித்து இரட்டை இலைக்கு ஓட்டளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.



அப்போது, அவர் அதிமுக அரசின் திட்டங்களை எடுத்து கூறியும், மதவாத பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை சொல்லியும் வாக்கு கேட்டார். மேலும் ஜெயித்தாலும், தோற்றாலும் எப்போதும் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் இயக்கம் அதிமுக, எனது பணியும் அவ்வாறே இருக்கும் என்றார். இந்த பிரசாரத்தின்போது, பல்லடம் பகுதி அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் உடன் சென்றனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...