கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு..!

தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில், பாஜக தலைவர் அண்ணாமலை மீது தேர்தல் நடத்தை விதியை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  முன்னதாக, திமுகவினரை தாக்கிய சம்பவத்தில், 4 பாஜகவினர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: தேர்தல் நடத்தை விடுதியின் படி இரவு 10 மணிக்கு மேல் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்ற விதிமுறையை மீறி பாஜகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், வேட்பாளர் அண்ணாமலை மீதுவழக்குப் பாய்ந்துள்ளது. 

நேற்று இரவு வார்டு 28 சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் பகுதியில் பாஜக வேட்பாளர் மற்றும் தொண்டர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டதும், விதிமீறலை தட்டிக் கேட்க சென்ற திமுகவினரை, பாஜகவினர் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை 

ஏற்படுத்தியுள்ளது. 



இந்த நிலையில், வன்முறையை அரங்கேற்றிய பாஜகவினர் மீது தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தி வந்த நிலையில்,இந்திய தண்டனை சட்டம் 294பி, 323, 147 உள்ளிட்ட பிரிவின் கீழ் - சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், அடித்து துன்புறுத்துதல், அநாகரீகமாக வசைபாடுதல் உள்ளிட்ட பிரிவில் ஆனந்தன், மாசாணி, லட்சுமி செந்தில், ரங்கநாதன் உள்ளிட்ட நான்கு பேர் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் அதிகாரி அளித்த புகாரின்படி, தேர்தல் நடத்தை விதியை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் நடத்தை விதி மீறல் வழக்கு பாய்ந்துள்ளது. 

தோல்வி பயத்தினால், பாஜகவினர் இடையூறு செய்ய திட்டமிட்டுள்ளனரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது என்று கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...