கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு..!

தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில், பாஜக தலைவர் அண்ணாமலை மீது தேர்தல் நடத்தை விதியை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  முன்னதாக, திமுகவினரை தாக்கிய சம்பவத்தில், 4 பாஜகவினர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: தேர்தல் நடத்தை விடுதியின் படி இரவு 10 மணிக்கு மேல் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்ற விதிமுறையை மீறி பாஜகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், வேட்பாளர் அண்ணாமலை மீதுவழக்குப் பாய்ந்துள்ளது. 

நேற்று இரவு வார்டு 28 சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் பகுதியில் பாஜக வேட்பாளர் மற்றும் தொண்டர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டதும், விதிமீறலை தட்டிக் கேட்க சென்ற திமுகவினரை, பாஜகவினர் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை 

ஏற்படுத்தியுள்ளது. 



இந்த நிலையில், வன்முறையை அரங்கேற்றிய பாஜகவினர் மீது தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தி வந்த நிலையில்,இந்திய தண்டனை சட்டம் 294பி, 323, 147 உள்ளிட்ட பிரிவின் கீழ் - சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், அடித்து துன்புறுத்துதல், அநாகரீகமாக வசைபாடுதல் உள்ளிட்ட பிரிவில் ஆனந்தன், மாசாணி, லட்சுமி செந்தில், ரங்கநாதன் உள்ளிட்ட நான்கு பேர் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் அதிகாரி அளித்த புகாரின்படி, தேர்தல் நடத்தை விதியை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் நடத்தை விதி மீறல் வழக்கு பாய்ந்துள்ளது. 

தோல்வி பயத்தினால், பாஜகவினர் இடையூறு செய்ய திட்டமிட்டுள்ளனரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது என்று கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...