ஆத்துப்பாளையத்தில் ஜிஎஸ்டி பற்றி கேள்வி எழுப்பிய பெண் மீது பாஜகவினர் தாக்குதல் – சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சங்கீதா என்பவர் பாஜகவினரிடம் பெண்கள் பயன்படுத்தும் லேப்கின்களுக்கு எதற்காக ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பிய நிலையில், அவரை அநாகிரகமான வார்த்தைகளால் திட்டி பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்துப்பாளையம் பகுதியில் நேற்று இரவு பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தத்திற்கு ஆதரவாக பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.

அப்போது அந்த பகுதியில் கடை வைத்து நடத்தி வரும், திராவிடர் விடுதலைக் கழக, மாவட்ட அமைப்பாளர் சங்கீதா என்பவர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தவர்களிடம் ஜி‌.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். 



குறிப்பாக, பெண்கள் உரிமை பற்றி பாஜக பேசி வரும் அரசு,பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி வரி ஏன் விதிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இதனால் பிரச்சாரத்துக்கு வந்த சில பாஜகவினர் அப்பெண்ணைஅநாகரீகமான வார்த்தைகளால் திட்டி தாக்குதலில் ஈடுபட முயற்சித்தனர். ஒருகட்டத்தில்வாக்குவாதம் முற்றி, சங்கீதாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தனது மொபைல் போனில் வீடியோவாக எடுத்த அந்தப் பெண் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

பிரச்சாரத்தின் போது, ஒரு பெண் வாக்காளரிடம் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்ட பாஜகவினருக்கு, பொதுமக்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...