ஆத்துப்பாளையத்தில் ஜிஎஸ்டி பற்றி கேள்வி எழுப்பிய பெண் மீது பாஜகவினர் தாக்குதல் – சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சங்கீதா என்பவர் பாஜகவினரிடம் பெண்கள் பயன்படுத்தும் லேப்கின்களுக்கு எதற்காக ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பிய நிலையில், அவரை அநாகிரகமான வார்த்தைகளால் திட்டி பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்துப்பாளையம் பகுதியில் நேற்று இரவு பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தத்திற்கு ஆதரவாக பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.

அப்போது அந்த பகுதியில் கடை வைத்து நடத்தி வரும், திராவிடர் விடுதலைக் கழக, மாவட்ட அமைப்பாளர் சங்கீதா என்பவர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தவர்களிடம் ஜி‌.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். 



குறிப்பாக, பெண்கள் உரிமை பற்றி பாஜக பேசி வரும் அரசு,பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி வரி ஏன் விதிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இதனால் பிரச்சாரத்துக்கு வந்த சில பாஜகவினர் அப்பெண்ணைஅநாகரீகமான வார்த்தைகளால் திட்டி தாக்குதலில் ஈடுபட முயற்சித்தனர். ஒருகட்டத்தில்வாக்குவாதம் முற்றி, சங்கீதாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தனது மொபைல் போனில் வீடியோவாக எடுத்த அந்தப் பெண் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

பிரச்சாரத்தின் போது, ஒரு பெண் வாக்காளரிடம் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்ட பாஜகவினருக்கு, பொதுமக்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...