ஆத்துப்பாளையத்தில் ஜிஎஸ்டி பற்றி கேள்வி எழுப்பிய பெண் மீது பாஜகவினர் தாக்குதல் – சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சங்கீதா என்பவர் பாஜகவினரிடம் பெண்கள் பயன்படுத்தும் லேப்கின்களுக்கு எதற்காக ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பிய நிலையில், அவரை அநாகிரகமான வார்த்தைகளால் திட்டி பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்துப்பாளையம் பகுதியில் நேற்று இரவு பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தத்திற்கு ஆதரவாக பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.

அப்போது அந்த பகுதியில் கடை வைத்து நடத்தி வரும், திராவிடர் விடுதலைக் கழக, மாவட்ட அமைப்பாளர் சங்கீதா என்பவர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தவர்களிடம் ஜி‌.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். 



குறிப்பாக, பெண்கள் உரிமை பற்றி பாஜக பேசி வரும் அரசு,பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி வரி ஏன் விதிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இதனால் பிரச்சாரத்துக்கு வந்த சில பாஜகவினர் அப்பெண்ணைஅநாகரீகமான வார்த்தைகளால் திட்டி தாக்குதலில் ஈடுபட முயற்சித்தனர். ஒருகட்டத்தில்வாக்குவாதம் முற்றி, சங்கீதாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தனது மொபைல் போனில் வீடியோவாக எடுத்த அந்தப் பெண் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

பிரச்சாரத்தின் போது, ஒரு பெண் வாக்காளரிடம் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்ட பாஜகவினருக்கு, பொதுமக்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Newsletter

Road Accidents in Coimbatore: Elderly Man Killed; Four Seriously Injured

Four separate road accidents reported in Thudiyalur, Kavanuai, Vadavalli and Ramanathapuram areas of Coimbatore have lef...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...

கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந...

கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோ...

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...