ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை மத்திய அரசால் மட்டுமே செயல்படுத்த முடியும் - பொள்ளாச்சியில் பாஜக வேட்பாளர் வசந்தராஜன் பேட்டி

500 ஆண்டுகால கோரிக்கையான ராமர் கோயில் கட்டியது போல், 50 ஆண்டு கால கோரிக்கையான ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை மத்திய அரசு மட்டுமே செயல்படுத்த முடியும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் இன்று பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட எரிசனம்பட்டி, தேவனூர்புதூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.



பின்னர் பேசிய அவர், பொள்ளாச்சியில் நேற்று தேர்தல் பரப்புரைக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை தமிழ்நாடு,கேரளா இரு மாநில அரசுகள் பேசி தான் நிறைவேற்ற முடியும் ஆனால் மத்திய அரசு எதையும் செய்ய முடியாது என்று பேசினார். ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடையே பேசிய பாஜக வேட்பாளார் வசந்தராஜன்., 500 ஆண்டுகால கோரிக்கையான ராமர் கோயில் கட்டியது போல் 50 ஆண்டு கால கோரிக்கையான ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை மத்திய அரசு மட்டுமே செயல்படுத்த முடியும். அதிமுக ஆட்சியில் ஏன் செயல்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் கடந்த ஐந்தாண்டுகளாக ஊழல் செய்து வரும் திமுக மற்றும் அதிமுகவை விரட்டியடிக்க வேண்டும் என்றும் வாக்கு சேகரிக்கும் போது பேசினார்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...