இது உள்ளூர் மக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கிடையாது - உடுமலையில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பிரச்சாரம்

கடந்த 10 ஆண்டுகால பாரத பிரதமர் மோடி ஆட்சி காலத்தில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து வீடுகளுக்கும் கழிவறை வசதி, தண்ணீர் வசதி, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றால் பலர் பலன் அடைந்துள்ளனர் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள வாளவாடி பகுதியில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜனுக்கு ஆதரவாக தாமரை சின்னத்தில் பொதுமக்களிடையே சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வாக்குகள் சேகரித்தனர்.



அப்போது அவர் பேசியதாவது,



கடந்த 10 ஆண்டுகால பாரத பிரதமர் மோடி ஆட்சி காலத்தில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து வீடுகளுக்கும் கழிவறை வசதி, தண்ணீர் வசதிகள், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டங்களால் பலர் பலன் அடைந்துள்ளனர். மேலும் நியாய விலை கடைகளில் நபர் ஒன்றுக்கு ஐந்து கிலோ இலவச அரிசையும் வழங்கபட்டு வருகிறது.

விவசாயிகள் நலனை மேம்படுத்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 6 ஆயிரம் ரூபாய் செலுத்தி வருகின்றார். எனவே உள்ளூர் மக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கிடையாது. மத்தியில் டெல்லியில் ஆளும் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுப்புக்காக தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் பேசும் பொழுது, தமிழகத்தில் திமுக அதிமுக அரசுகள் மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை முறைகேடு செய்து மக்களுக்கு குறைவாக கொடுத்து வருகிறார்கள். மேலும் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதற்காகவே அமைச்சர் சக்கரபாணி மூலம் போடப்பட்ட வேட்பாளர் தான் தற்பொழுது திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி, எனவே இந்த திட்டத்தை பாஜக கண்டிப்பாக முறியடிக்கும் என தெரிவித்தார் வாக்கு சேகரிப்பின் போது கூட்டணி கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, ஓபிஎஸ் அணி அதிமுக மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...