தமிழ்நாட்டு மக்கள் நலன் பற்றி சிந்திக்கும் ஒரே கட்சி அதிமுக தான்- காங்கேயத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேச்சு

கலைஞர் கருணாநிதி சாராயத்தை வைத்து இந்த தலைமுறையை காலி செய்தார். அவர்களுடைய மகன் ஸ்டாலின் வந்து அடுத்த தலைமுறையை போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை வைத்து காலி செய்து வருகிறார் என அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் விமர்சித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட திருவிக நகர் மற்றும் ஏசி காலனி பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் இன்று காலை 6 மணி முதல் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக காங்கேயம் நகர செயலாளர் வெங்கு ஜி. மணிமாறன் தலைமையில் நகர பொருளாளர் கந்தசாமி முன்னிலையில் மாவட்ட பொருளாளர் கிஷோர் குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் ஈரோடு அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் கூறுகையில், இரட்டை இலையும், அதிமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டில் மக்கள் நலன் பற்றி சிந்திக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்றும், இதற்கு நேர் மாறாக இருக்கும் மக்கள் விரோத ஆட்சி திமுக அரசு என்றும், இதுவரை எந்த மக்கள் நல திட்டங்களையும் செய்யவில்லை. புரட்சித்தலைவி அம்மா ஆட்சியிலும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிலும் செயல்படுத்தப்பட்ட எந்த நலத்திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை.



தமிழகத்தில் சாராய ஆலைகள் அதிக அளவில் திமுக இடம் தான் உள்ளது. அதனால் மதுக்கடைகளை மூடுவதாக கூறிவிட்டு அதிக அளவில் திறந்து வைத்துள்ளனர். கலைஞர் அவர்கள் சாராயத்தை வைத்து இந்த தலைமுறையை காலி செய்தார்கள். அவர்களுடைய மகன் ஸ்டாலின் வந்து அடுத்த தலைமுறையை போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை வைத்து காலி செய்து வருகிறார். மேலும் விலைவாசி வியர்வை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...