தமிழ்நாட்டு மக்கள் நலன் பற்றி சிந்திக்கும் ஒரே கட்சி அதிமுக தான்- காங்கேயத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேச்சு

கலைஞர் கருணாநிதி சாராயத்தை வைத்து இந்த தலைமுறையை காலி செய்தார். அவர்களுடைய மகன் ஸ்டாலின் வந்து அடுத்த தலைமுறையை போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை வைத்து காலி செய்து வருகிறார் என அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் விமர்சித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட திருவிக நகர் மற்றும் ஏசி காலனி பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் இன்று காலை 6 மணி முதல் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக காங்கேயம் நகர செயலாளர் வெங்கு ஜி. மணிமாறன் தலைமையில் நகர பொருளாளர் கந்தசாமி முன்னிலையில் மாவட்ட பொருளாளர் கிஷோர் குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் ஈரோடு அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் கூறுகையில், இரட்டை இலையும், அதிமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டில் மக்கள் நலன் பற்றி சிந்திக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்றும், இதற்கு நேர் மாறாக இருக்கும் மக்கள் விரோத ஆட்சி திமுக அரசு என்றும், இதுவரை எந்த மக்கள் நல திட்டங்களையும் செய்யவில்லை. புரட்சித்தலைவி அம்மா ஆட்சியிலும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிலும் செயல்படுத்தப்பட்ட எந்த நலத்திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை.



தமிழகத்தில் சாராய ஆலைகள் அதிக அளவில் திமுக இடம் தான் உள்ளது. அதனால் மதுக்கடைகளை மூடுவதாக கூறிவிட்டு அதிக அளவில் திறந்து வைத்துள்ளனர். கலைஞர் அவர்கள் சாராயத்தை வைத்து இந்த தலைமுறையை காலி செய்தார்கள். அவர்களுடைய மகன் ஸ்டாலின் வந்து அடுத்த தலைமுறையை போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை வைத்து காலி செய்து வருகிறார். மேலும் விலைவாசி வியர்வை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...