தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை - பொள்ளாச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை

அதிமுகவை உடைக்க நினைத்த மு.க.ஸ்டாலின் கனவு உடைக்கப்பட்டது. தேர்தல் என்ற போரில் எதிரிகளை விரட்டி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கார்த்திகேயனை ஆதரித்து இன்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் பகுதியில் உள்ள மார்க்கெட் ரோட்டில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய அவர், அதிமுகவை உடைக்க நினைத்த மு.க.ஸ்டாலின் கனவு உடைக்கப்பட்டது. தேர்தல் என்ற போரில் எதிரிகளை விரட்டி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும். கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுக தொண்டர்கள் நிறைந்த கட்சி இது யாராலும் எதுவும் செய்ய முடியாது.



ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு கேரளா இரு மாநில அரசுகள் பேசி தீர்க்கும் திட்டம். இது எப்படி மத்திய அரசு தலையிட முடியும். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை. அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை ஒரே மேடையில் நின்று மு.க.ஸ்டாலின் பேச தயாரா என்று தேர்தல் பரப்பரை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். பேட்டி கொடுத்து மக்களை ஈர்த்து வாக்குளை பெற முயற்சி செய்வதாக அண்ணாமலை மீது அவர் மறைமுகமாக சாடினார்.



இந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன், உடுமலை ராதாகிருஷ்ணன், அமுல் கந்தசாமி, மகேந்திரன் மற்றும் பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...