தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை - பொள்ளாச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை

அதிமுகவை உடைக்க நினைத்த மு.க.ஸ்டாலின் கனவு உடைக்கப்பட்டது. தேர்தல் என்ற போரில் எதிரிகளை விரட்டி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கார்த்திகேயனை ஆதரித்து இன்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் பகுதியில் உள்ள மார்க்கெட் ரோட்டில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய அவர், அதிமுகவை உடைக்க நினைத்த மு.க.ஸ்டாலின் கனவு உடைக்கப்பட்டது. தேர்தல் என்ற போரில் எதிரிகளை விரட்டி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும். கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுக தொண்டர்கள் நிறைந்த கட்சி இது யாராலும் எதுவும் செய்ய முடியாது.



ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு கேரளா இரு மாநில அரசுகள் பேசி தீர்க்கும் திட்டம். இது எப்படி மத்திய அரசு தலையிட முடியும். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை. அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை ஒரே மேடையில் நின்று மு.க.ஸ்டாலின் பேச தயாரா என்று தேர்தல் பரப்பரை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். பேட்டி கொடுத்து மக்களை ஈர்த்து வாக்குளை பெற முயற்சி செய்வதாக அண்ணாமலை மீது அவர் மறைமுகமாக சாடினார்.



இந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன், உடுமலை ராதாகிருஷ்ணன், அமுல் கந்தசாமி, மகேந்திரன் மற்றும் பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....