கோவை மேட்டுப்பாளையத்தில் பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கோவை விமான நிலையத்திற்கு நாளை மதியம் 1:50க்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்து பேச உள்ளார்.


கோவை: பா.ஜ.க.வின் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாமலை மற்றும் நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் L. முருகன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கவும் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசவும் நாளை பிரதமர் கோவை வருகிறார்.

இந்த நிகழ்ச்சி நாளை மதியம் 1 மணிக்கு மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதி பகுதியில் உள்ள நான்குரோடு சந்திப்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று ஏப்ரல்.9 இதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஹெலிகாப்டர் ஒத்திகைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்க அங்கு ஒரு ஹெலிபேட் உருவாக்கப்பட்டுள்ளது. முதலாவதாக கோவை விமான நிலையத்திற்கு மதியம் 1:50க்கு வரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்து பேச உள்ளார். அதன் பின்னர் மதியம் 3.30 மணிக்கு திரும்பவும் ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து நாக்பூர் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...