கோவை மேட்டுப்பாளையத்தில் பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கோவை விமான நிலையத்திற்கு நாளை மதியம் 1:50க்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்து பேச உள்ளார்.


கோவை: பா.ஜ.க.வின் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாமலை மற்றும் நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் L. முருகன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கவும் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசவும் நாளை பிரதமர் கோவை வருகிறார்.

இந்த நிகழ்ச்சி நாளை மதியம் 1 மணிக்கு மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதி பகுதியில் உள்ள நான்குரோடு சந்திப்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று ஏப்ரல்.9 இதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஹெலிகாப்டர் ஒத்திகைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்க அங்கு ஒரு ஹெலிபேட் உருவாக்கப்பட்டுள்ளது. முதலாவதாக கோவை விமான நிலையத்திற்கு மதியம் 1:50க்கு வரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்து பேச உள்ளார். அதன் பின்னர் மதியம் 3.30 மணிக்கு திரும்பவும் ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து நாக்பூர் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...