உடுமலையில் கவர நாயுடு சமூக நலச்சங்கம் சார்பில் 11 ஆம் ஆண்டு யுகாதி பெருவிழா கொண்டாட்டம்

யுகாதி விழாவைமுன்னிட்டு நடைபெற்ற கோலப்போட்டி, பேச்சு போட்டி, தண்ணீர் நிரப்புதல் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ராம அய்யர் திருமண மண்டபத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுக்கா கவர நாயுடு சமூக நலச்சங்கம் சார்பில் 11 ஆம் ஆண்டு யுகாதி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக ஹயக்கீரிவர் பூஜைகளும், குழந்தைகளின் பெயரில் அர்ச்சனைகளும் செய்யப்பட்டது. மேலும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்திட சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னர் பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து கோலப்போட்டி, பேச்சு போட்டி, தண்ணீர் நிரப்புதல் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது.



தலைமை சங்க நிர்வாகிகள் தலைவர் அரிமா லோகநாதன், செயலாளர் ராமதுரை, பொருளாளர் ஜெகநாதன்,தலைமை செயலாளர் முருகேசன், நிர்வாக ஆலோசகர் சுப்புராமன், துணைத் தலைவர்கள் கொழுமம் துரைசாமி, வெங்கட் ராமானுஜம், துணைச் செயலாளர்கள் சிவக்குமார், சிவசாமி, சட்ட ஆலோசர்கள் ஜோதி நாகராஜன், சீனிவாசன், மக்கள் தொடர்பு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் மாநில துணை பொதுச்செயலாளர் கொழுமம் தாமோதரன், குறிச்சிக் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன், அருண்குமார், பிரவீன், அங்கமுத்துஉட்படதிரளானோர்கலந்து கொண்டனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...