உடுமலையில் கவர நாயுடு சமூக நலச்சங்கம் சார்பில் 11 ஆம் ஆண்டு யுகாதி பெருவிழா கொண்டாட்டம்

யுகாதி விழாவைமுன்னிட்டு நடைபெற்ற கோலப்போட்டி, பேச்சு போட்டி, தண்ணீர் நிரப்புதல் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ராம அய்யர் திருமண மண்டபத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுக்கா கவர நாயுடு சமூக நலச்சங்கம் சார்பில் 11 ஆம் ஆண்டு யுகாதி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக ஹயக்கீரிவர் பூஜைகளும், குழந்தைகளின் பெயரில் அர்ச்சனைகளும் செய்யப்பட்டது. மேலும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்திட சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னர் பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து கோலப்போட்டி, பேச்சு போட்டி, தண்ணீர் நிரப்புதல் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது.



தலைமை சங்க நிர்வாகிகள் தலைவர் அரிமா லோகநாதன், செயலாளர் ராமதுரை, பொருளாளர் ஜெகநாதன்,தலைமை செயலாளர் முருகேசன், நிர்வாக ஆலோசகர் சுப்புராமன், துணைத் தலைவர்கள் கொழுமம் துரைசாமி, வெங்கட் ராமானுஜம், துணைச் செயலாளர்கள் சிவக்குமார், சிவசாமி, சட்ட ஆலோசர்கள் ஜோதி நாகராஜன், சீனிவாசன், மக்கள் தொடர்பு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் மாநில துணை பொதுச்செயலாளர் கொழுமம் தாமோதரன், குறிச்சிக் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன், அருண்குமார், பிரவீன், அங்கமுத்துஉட்படதிரளானோர்கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...