பொள்ளாச்சியில் எம்பிஎஸ் ஹேட்சரீஸ் நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை - ரூ.32 கோடி பறிமுதல் என தகவல்

பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள எம்பிஎஸ் ஹேட்சரீஸ் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மகாலிங்கபுரம் மற்றும் அழகப்பா லேஅவுட் ஆகிய பகுதிகளில் உள்ள உரிமையாளர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.


கோவை: பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அருள் முருகன் மற்றும் சரவண முருகன் ஆகியோர் தமிழக முழுவதும் எம்பிஎஸ் ஹேட் சரீஸ் என்னும் பெயரில் கோழி தீவனம் நிறுவனம் மற்றும் கோழிப்பண்ணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று தமிழக முழுவதும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது இன்றும் இரண்டாவது நாளாக தொடர்கிறது.



பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள எம்பிஎஸ் ஹேட்சரீஸ் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.



மேலும் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் மற்றும் அழகப்பா லேஅவுட் ஆகிய பகுதிகளில் உள்ள அவர்களின் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நேற்று மாலை துவங்கப்பட்டு இன்று காலை வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை கணக்கில் வராத 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...