பொள்ளாச்சியில் எம்பிஎஸ் ஹேட்சரீஸ் நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை - ரூ.32 கோடி பறிமுதல் என தகவல்

பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள எம்பிஎஸ் ஹேட்சரீஸ் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மகாலிங்கபுரம் மற்றும் அழகப்பா லேஅவுட் ஆகிய பகுதிகளில் உள்ள உரிமையாளர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.


கோவை: பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அருள் முருகன் மற்றும் சரவண முருகன் ஆகியோர் தமிழக முழுவதும் எம்பிஎஸ் ஹேட் சரீஸ் என்னும் பெயரில் கோழி தீவனம் நிறுவனம் மற்றும் கோழிப்பண்ணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று தமிழக முழுவதும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது இன்றும் இரண்டாவது நாளாக தொடர்கிறது.



பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள எம்பிஎஸ் ஹேட்சரீஸ் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.



மேலும் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் மற்றும் அழகப்பா லேஅவுட் ஆகிய பகுதிகளில் உள்ள அவர்களின் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நேற்று மாலை துவங்கப்பட்டு இன்று காலை வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை கணக்கில் வராத 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...