பொள்ளாச்சியில் எம்பிஎஸ் ஹேட்சரீஸ் நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை - ரூ.32 கோடி பறிமுதல் என தகவல்

பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள எம்பிஎஸ் ஹேட்சரீஸ் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மகாலிங்கபுரம் மற்றும் அழகப்பா லேஅவுட் ஆகிய பகுதிகளில் உள்ள உரிமையாளர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.


கோவை: பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அருள் முருகன் மற்றும் சரவண முருகன் ஆகியோர் தமிழக முழுவதும் எம்பிஎஸ் ஹேட் சரீஸ் என்னும் பெயரில் கோழி தீவனம் நிறுவனம் மற்றும் கோழிப்பண்ணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று தமிழக முழுவதும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது இன்றும் இரண்டாவது நாளாக தொடர்கிறது.



பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள எம்பிஎஸ் ஹேட்சரீஸ் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.



மேலும் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் மற்றும் அழகப்பா லேஅவுட் ஆகிய பகுதிகளில் உள்ள அவர்களின் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நேற்று மாலை துவங்கப்பட்டு இன்று காலை வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை கணக்கில் வராத 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...