திருப்பூர் அருகே காரும் , அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு..!

60 வது திருமண நாளை திருக்கடையூரில் கொண்டாடிவிட்டு, மீண்டும் திருப்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்த சந்திரசேகர் - சித்ரா தம்பதியினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் என 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் அருகே காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காரில் பயணித்த அதே குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மட்டும் படுகாயங்களுடன்மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திருப்பூரை சேர்ந்த சந்திரசேகர் மற்றும் சித்ரா தம்பதியினரின், அவர்களது 60-வது திருமண நாளை கொண்டாடுவதற்காக, நேற்றைய தினம் திருக்கடையூர் சென்று விட்டு மீண்டும் திருப்பூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். 



இன்று அதிகாலை வெள்ளகோவிலை கடந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, ஓலப்பாளையம் என்னும் இடத்தில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சந்திரசேகரின் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது, என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதில் காரில் பயணித்த சந்திரசேகர், சித்ரா, இளவரசர், அரிவித்ரா, மூன்று மாத குழந்தை சாக்சி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காரில் பயணித்த மற்றொரு நபர் படுகாயர்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

இந்த விபத்து காரணமாக, கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பதிலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக வெள்ளகோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கார் மற்றும் பேருந்தைமீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.

சாலை விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...