கோவை சின்னியம்பாளையம் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் தங்க வைர நகைகள் கொள்ளை...!

கோவை சின்னியம்பாளையம் தொட்டிபாளையத்தில், பூட்டி இருந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டில், 58 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து பிளம்பர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 58 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சின்னியம்பாளையம் தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி. ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் காங்கயத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று விட்டு, அன்று இரவு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர், உடனே உள்ளே சென்று பார்த்தபோது உடைமைகள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளது.

பீரோவை சோதனை செய்து பார்த்த போது, அதில் வைக்கப்பட்டிருந்த 58 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 30 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து குமாரசாமி, பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், கைரேகை நிபுணர்களுடன் சென்று சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். வீட்டு கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த 2 கைரேகை பதிவுகளை சேகரித்தனர். மேலும் அங்கு இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள், நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...