தேசத்தின் வளர்ச்சிக்கான திட்டத்தை அறிக்கையில் கூட எதிர்க்கட்சியினர் பயன்படுத்தவில்லை - தும்மனட்டியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் பிரச்சாரம்

ஊழல்வாதிகள் மற்றும் குடும்ப நலன் கொண்ட சுயநலவாதிகளால் உருவாக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சியை விரட்டுவோம் என்று கூறி பாஜக வேட்பாளர் எல்.முருகன் வாக்கு சேகரித்தார்.


நீலகிரி: மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன், நீலகிரி பாராளுமன்றம், உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தும்மனட்டி ஊர் மக்களைச் இன்று (ஏப்ரல்.7) சந்தித்து பரப்புரை செய்து, தாமரை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.



அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்வதன் அவசியம் குறித்து விளக்கினார். நடைமுறைக்கு சாத்தியமற்ற பொய் வாக்குறுதிகளை அறிக்கையாக தயாரித்து, கடந்த பத்தாண்டுகளில் நாம் கட்டியமைத்த பொருளாதாரக் கட்டுமானத்தை உடைப்பதையே நோக்கமாக கொண்டுள்ள எதிர்க்கட்சிகள், தேசத்தின் வளர்ச்சிக்கான திட்டத்தை அறிக்கையில் கூட பயன்படுத்தவில்லை.



இப்படி தகுதியற்றவர்களை மீண்டும் மீண்டும் நிராகரிக்க வேண்டியது நமது கடமை. முற்றிலும், ஊழல்வாதிகள் மற்றும் குடும்ப நலன் கொண்ட சுயநலவாதிகளால் உருவாக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சியை விரட்டுவோம் என்று கூறி வாக்கு சேகரித்தார். உடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...