கோவையில் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி முதல்வரை மாற்றகோரி மாணவர்கள் 5-வது நாளாக போராட்டம்


கோவையில் மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி முதல்வரை மாற்றகோரி அக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 5-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து, துணி துவைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அவினாசி சாலை பீளமேடு அருகே மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கீழ் சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளிடம்,  அக்கல்லூரியின் பாதுகாப்பு அலுவலர் கலைச்செல்வன் என்பவர் ஆபாச வார்த்தைகளை பேசுவதாகவும், இதனை தட்டி கேட்க வேண்டிய கல்லூரி முதல்வர் பெருமாள்சாமி, மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதாகவும் குற்றம்சாட்டி, மாணவ மாணவியர் கடந்த 4 நாட்களாக வகுப்புகள் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்லூரி முதல்வர் மற்றும் பாதுகாப்பு அலுவலர் மீது ஏற்கனவே கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி 5-வது நாளாக  இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், கல்லூரி வளாகத்திலேயே துணி துவைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக கல்லூரி முதல்வர் மற்றும் பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மத்திய அரசின் செயல்பாட்டின் கீழ் இயங்கும் இக்கல்லூரியில் போதிய திறமை வாய்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆய்வக வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியர்கள் தெரிவித்தனர். மேலும், நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...