வெள்ளலூர் குப்பை கிடங்கில் தொடரும் தீயணைப்பு பணிகள்..!

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் சனிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டததையடுத்து 100 -க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 15 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் நேற்று, சனிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இன்றும் தீ எரிந்து வருவதால்,தீயை அணைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையர் எம்.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணிகளை பார்வையிட்டனர்.

திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்து என மொத்தம் 15 தீயணைப்பு வாகனங்கள், கனரக வாகனங்கள், தண்ணீர் லாரிகள், 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள், என போர்க்கால அடிப்படையில் தீயை கட்டுக்குள் கொண்டுவரமுயற்சித்து வருகின்றனர்.

மேலும், தீ பரவலை கண்காணிப்பதற்காக,ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 60 ஏக்கரில் தீ பரவி இருப்பதாகவும், நாளை வரை தீயணைப்பு பணி தொடரும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரை இல்லாத அளவிற்கு இது மிகப்பெரிய தீ பரவலாக உள்ளதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், பெரும்பாலான பகுதி கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், புகைமூட்டம் தொடர்வதால், குடியிருப்பு வாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர், என்றனர்.

சமீபத்தில், கோவையில் அதிகப்படியான வெப்பம் நிலவி வருவதால், தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டாலும், மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளிவரவில்லை.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...