தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரை மிரட்டியது தொடர்பாக திருப்பூர் ஆட்சியரிடம் ஆதாரங்களுடன் பாஜக வேட்பாளர் முருகானந்தம் புகார்

எந்த ஒரு ஆவணங்களும் இல்லாமல் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் என்ற பெயரில் சோதனை மேற்கொண்டு வருவதாகவும், அவ்வழியே வருபவர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாகவும் பாஜக வேட்பாளர் முருகானந்தம் புகார் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம் போட்டியிடுகிறார். கடந்த ஒரு வார காலமாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர பரப்பரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் அந்தியூர் அருகே தேர்தல் பரப்பரையில் ஈடுபட்டபோது தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் வேட்பாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் மீது குன்னத்தூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



பணியில் இருந்த தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தும் கூட தன்னிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாகவும், இது குறித்து கேட்டதற்காக தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, தனது நேரத்தை திட்டமிட்டு முடக்குவதற்காக இச்சம்பவம் நடந்துள்ளதா என்ற சந்தேகம் எழுவதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜுவை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து சம்பவம் நடந்தபோது எடுத்த வீடியோ காட்சிகளுடன் புகார் மனுவை அளித்துள்ளார்.



தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த ஒரு ஆவணங்களும் இல்லாமல் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் என்ற பெயரில் சோதனை மேற்கொண்டு வருவதாகவும், அவ்வழியே வருபவர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாகவும், இது குறித்தெல்லாம் கேட்டதற்காக தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், வழக்கு பதிவு செய்வதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை எனவும், அதற்கான ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜூவிடம் விளக்கமாக எடுக்கக் கூறி புகார் மனு அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...