தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரை மிரட்டியது தொடர்பாக திருப்பூர் ஆட்சியரிடம் ஆதாரங்களுடன் பாஜக வேட்பாளர் முருகானந்தம் புகார்

எந்த ஒரு ஆவணங்களும் இல்லாமல் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் என்ற பெயரில் சோதனை மேற்கொண்டு வருவதாகவும், அவ்வழியே வருபவர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாகவும் பாஜக வேட்பாளர் முருகானந்தம் புகார் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம் போட்டியிடுகிறார். கடந்த ஒரு வார காலமாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர பரப்பரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் அந்தியூர் அருகே தேர்தல் பரப்பரையில் ஈடுபட்டபோது தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் வேட்பாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் மீது குன்னத்தூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



பணியில் இருந்த தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தும் கூட தன்னிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாகவும், இது குறித்து கேட்டதற்காக தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, தனது நேரத்தை திட்டமிட்டு முடக்குவதற்காக இச்சம்பவம் நடந்துள்ளதா என்ற சந்தேகம் எழுவதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜுவை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து சம்பவம் நடந்தபோது எடுத்த வீடியோ காட்சிகளுடன் புகார் மனுவை அளித்துள்ளார்.



தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த ஒரு ஆவணங்களும் இல்லாமல் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் என்ற பெயரில் சோதனை மேற்கொண்டு வருவதாகவும், அவ்வழியே வருபவர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாகவும், இது குறித்தெல்லாம் கேட்டதற்காக தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், வழக்கு பதிவு செய்வதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை எனவும், அதற்கான ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜூவிடம் விளக்கமாக எடுக்கக் கூறி புகார் மனு அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...