கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்து!

மூன்று தீயணைப்பு நிலையங்களில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மாநகராட்சி தண்ணீர் வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.


கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 100 வார்டுகளின் குப்பைகள் சேகரிக்கப்படும் வெள்ளலூர் குப்பை கிடங்கில், இன்று மாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் போல் காட்சியளிக்கிறது. 

கோவை வெள்ளலூர்- செட்டிபாளையம் செல்லும் வழியில் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இந்த வெள்ளலூர் குப்பை கிடங்கில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு, தரம் பிரிக்கப்படும்.



இந்த நிலையில் இன்று (ஏப்ரல்.6) மாலை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தரம் பிரிக்கும் இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.



உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மாநகராட்சி தண்ணீர் வண்டிகள் தீயை அணைக்க விரைந்தன.



தற்போது, தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...