கோவை மேட்டுப்பாளையத்தில் கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகள் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

ராமச்சந்திரன் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த திலீப் மற்றும் கௌரிசங்கர் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று (ஏப்ரல்.5) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவை, மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு மகன் ராமச்சந்திரன்(29). இவரை முன் விரோதம் காரணமாக கொல்ல செய்ய முயன்ற வழக்கில் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திலீப் (19) மற்றும் மருதாச்சலம் மகன் கௌரிசங்கர் (21) ஆகிய இரண்டு பேர் மீது மேட்டுப்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டும், பொது அமைதிக்கும், சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்டு வந்த குற்றத்திற்காக இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் திலீப், கௌரிசங்கர் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் திலீப் மற்றும் கௌரிசங்கர் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று (ஏப்ரல்.5) கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...