கோவை மேட்டுப்பாளையத்தில் கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகள் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

ராமச்சந்திரன் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த திலீப் மற்றும் கௌரிசங்கர் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று (ஏப்ரல்.5) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவை, மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு மகன் ராமச்சந்திரன்(29). இவரை முன் விரோதம் காரணமாக கொல்ல செய்ய முயன்ற வழக்கில் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திலீப் (19) மற்றும் மருதாச்சலம் மகன் கௌரிசங்கர் (21) ஆகிய இரண்டு பேர் மீது மேட்டுப்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டும், பொது அமைதிக்கும், சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்டு வந்த குற்றத்திற்காக இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் திலீப், கௌரிசங்கர் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் திலீப் மற்றும் கௌரிசங்கர் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று (ஏப்ரல்.5) கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Newsletter

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...

கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை: தேர்தல் அமைதிக்கு போலீசார் தீவிர நடவடிக்கை

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் 594 ரவுடிகளிட...

கோவையில் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித...

கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி...

திருநங்கை உரிமைப் போராளி கல்கி சுப்ரமணியம் தேசிய திருநங்கைகள் குழுவிலிருந்து ராஜினாமா

திருநங்கை உரிமைப் போராளி கல்கி சுப்ரமணியம், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா 2026-ஐ எதிர்த்து தேசிய திரு...