திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தம் மீது வழக்கு

சோதனை செய்ய முயன்ற நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகளை வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு நடக்க வைத்து விடுவேன் என மிரட்டியதாக பாஜக வேட்பாளர் முருகானந்தத்தின் மீது குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் முருகானந்தம் நிலை கண்காணிப்பு குழு அதிகாரியை மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் முருகானந்தம் இன்று திருப்பூரில் இருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.

திருப்பூர் மாவட்ட மற்றும் ஈரோடு மாவட்ட எல்லையான குறிஞ்சிபுதூர் பகுதியில் சோதனைச் சாவடி உள்ளது. இச்சோதனை சாவடி வழியாக காரில் வந்த பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.பி. முருகானந்தத்தின் காரை அங்கு பணியில் இருந்த நிலை கண்காணிப்பு குழுவினர் தடுத்து சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.



அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் நிலை கண்காணிப்பு குழுவினர் மரியாதை குறைவாக பேசியதோடு மட்டும்மல்லாமல், நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகளை வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு நடக்க வைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து வாக்கு வாதத்திற்கு இடையே வேட்பாளர் வந்த காரை சோதனை செய்த பிறகு வேட்பாளர் முருகானந்தம் கோபிசெட்டிபாளையம் நோக்கி சென்றார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியில் வேட்பாளரான AP.முருகானந்தத்தின் மீது பறக்கும் படை அதிகாரி முருகேசன் அளித்த புகாரின் அடிப்படையில் குன்னத்தூர் போலீசார் தேர்தல் பறக்கும் படையினரை பணிசெய்ய விடாமல் மிரட்டியதாகவும் தடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...