திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தம் மீது வழக்கு

சோதனை செய்ய முயன்ற நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகளை வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு நடக்க வைத்து விடுவேன் என மிரட்டியதாக பாஜக வேட்பாளர் முருகானந்தத்தின் மீது குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் முருகானந்தம் நிலை கண்காணிப்பு குழு அதிகாரியை மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் முருகானந்தம் இன்று திருப்பூரில் இருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.

திருப்பூர் மாவட்ட மற்றும் ஈரோடு மாவட்ட எல்லையான குறிஞ்சிபுதூர் பகுதியில் சோதனைச் சாவடி உள்ளது. இச்சோதனை சாவடி வழியாக காரில் வந்த பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.பி. முருகானந்தத்தின் காரை அங்கு பணியில் இருந்த நிலை கண்காணிப்பு குழுவினர் தடுத்து சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.



அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் நிலை கண்காணிப்பு குழுவினர் மரியாதை குறைவாக பேசியதோடு மட்டும்மல்லாமல், நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகளை வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு நடக்க வைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து வாக்கு வாதத்திற்கு இடையே வேட்பாளர் வந்த காரை சோதனை செய்த பிறகு வேட்பாளர் முருகானந்தம் கோபிசெட்டிபாளையம் நோக்கி சென்றார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியில் வேட்பாளரான AP.முருகானந்தத்தின் மீது பறக்கும் படை அதிகாரி முருகேசன் அளித்த புகாரின் அடிப்படையில் குன்னத்தூர் போலீசார் தேர்தல் பறக்கும் படையினரை பணிசெய்ய விடாமல் மிரட்டியதாகவும் தடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...