திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தம் மீது வழக்கு

சோதனை செய்ய முயன்ற நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகளை வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு நடக்க வைத்து விடுவேன் என மிரட்டியதாக பாஜக வேட்பாளர் முருகானந்தத்தின் மீது குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் முருகானந்தம் நிலை கண்காணிப்பு குழு அதிகாரியை மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் முருகானந்தம் இன்று திருப்பூரில் இருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.

திருப்பூர் மாவட்ட மற்றும் ஈரோடு மாவட்ட எல்லையான குறிஞ்சிபுதூர் பகுதியில் சோதனைச் சாவடி உள்ளது. இச்சோதனை சாவடி வழியாக காரில் வந்த பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.பி. முருகானந்தத்தின் காரை அங்கு பணியில் இருந்த நிலை கண்காணிப்பு குழுவினர் தடுத்து சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.



அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் நிலை கண்காணிப்பு குழுவினர் மரியாதை குறைவாக பேசியதோடு மட்டும்மல்லாமல், நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகளை வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு நடக்க வைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து வாக்கு வாதத்திற்கு இடையே வேட்பாளர் வந்த காரை சோதனை செய்த பிறகு வேட்பாளர் முருகானந்தம் கோபிசெட்டிபாளையம் நோக்கி சென்றார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியில் வேட்பாளரான AP.முருகானந்தத்தின் மீது பறக்கும் படை அதிகாரி முருகேசன் அளித்த புகாரின் அடிப்படையில் குன்னத்தூர் போலீசார் தேர்தல் பறக்கும் படையினரை பணிசெய்ய விடாமல் மிரட்டியதாகவும் தடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...