உடுமலை அருகே ஆண்டியகவுண்டனூரில் பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து- ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்

எந்திரங்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பஞ்சு மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஏற்றுமதிக்கு தயாராக இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 20 ஆயிரம் கிலோ பஞ்சுகள் எரிந்து நாசமானது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சி பகுதியில் செல்வகுமார் என்பவர் கழுவு பஞ்சு தொழிற்சாலை நடத்தி வருகின்றார். இன்று வழக்கம் போல் நூற்பாலை இயங்கிக் கொண்டு இருந்தது. அப்போது எந்திரங்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எழுந்த காரணத்தால் பணி புரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் அலறி எடுத்து ஓட்டம் பிடித்தனர்.



பின்னர் சம்பவத்துக்கு வந்த உடுமலை தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி அமைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் ஏற்றுமதிக்கு தயாராக இருந்த 20 லட்சம் மதிப்பிலான 20 ஆயிரம் கிலோ பஞ்சுகள் எரிந்து நாசமானது.



இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டவுடன் ஊழியர்கள் வெளியே ஓடிவரும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது. தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். உடுமலை அருகே கழிவு பஞ்சு நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...