தாராபுரம் அருகே 1 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 1லட்சத்து 57 ஆயிரம் பணத்தை எடுத்து சென்ற வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சந்திராபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் இன்று ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அந்த வழியாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த வரப்பாளையம் கிராமம் ராஜா என்பவரது மகன் அஜித் குமார் ஓட்டி வந்த எலக்ட்ரிக் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது சீட்டின் அடியில் ஆவணம் இன்றி மறைத்து வைத்திருந்த 1லட்சத்து 57ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரியும், தோட்ட கலைத்துறை உதவி இயக்குனருமான சசிகலா மற்றும் போலீசார் ஆசைத்தம்பி, துர்காதேவி ஆகிய பறக்கும் படை குழுவினர் ஆவணம் இன்றி அஜித்குமார் (வயது 24)எடுத்து வந்த ரொக்க பணத்தினை கைப்பற்றி தாராபுரம் கோட்டாட்சியர் மணிகண்டனிடம் ஒப்படைத்தனர். அவர் கைப்பற்றப்பட்ட பணத்தை தாராபுரம் அரசு கருவூலத்தில் வைத்துள்ளார்.

மேலும் உரிய ஆவணங்களை காட்டி அஜித்குமார் பணத்தை எடுத்துச் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் போலீஸ் சார் அஜீத் குமார் இடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...