தாராபுரம் அருகே 1 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 1லட்சத்து 57 ஆயிரம் பணத்தை எடுத்து சென்ற வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சந்திராபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் இன்று ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அந்த வழியாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த வரப்பாளையம் கிராமம் ராஜா என்பவரது மகன் அஜித் குமார் ஓட்டி வந்த எலக்ட்ரிக் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது சீட்டின் அடியில் ஆவணம் இன்றி மறைத்து வைத்திருந்த 1லட்சத்து 57ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரியும், தோட்ட கலைத்துறை உதவி இயக்குனருமான சசிகலா மற்றும் போலீசார் ஆசைத்தம்பி, துர்காதேவி ஆகிய பறக்கும் படை குழுவினர் ஆவணம் இன்றி அஜித்குமார் (வயது 24)எடுத்து வந்த ரொக்க பணத்தினை கைப்பற்றி தாராபுரம் கோட்டாட்சியர் மணிகண்டனிடம் ஒப்படைத்தனர். அவர் கைப்பற்றப்பட்ட பணத்தை தாராபுரம் அரசு கருவூலத்தில் வைத்துள்ளார்.

மேலும் உரிய ஆவணங்களை காட்டி அஜித்குமார் பணத்தை எடுத்துச் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் போலீஸ் சார் அஜீத் குமார் இடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...