பவானி ஆற்றிலிருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் பருவ மழை குறைவினால் தற்போது கடும் வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகின்றது. அதே போல் கோவை மாவட்டத்திலும் கடுமையான வறட்சியும் குடிநீர் பற்றாக்குறையும் நிலவி வருவதுடன் அணைகளிலும் நீர்மட்டம் குறைந்துவிட்டது.

எனவே, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு, பவானி ஆற்றிலிருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து வரும் விவசாயிகள் இனி வரும் காலங்களில் தண்ணீர் எடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த அறிவிப்பினை மீறி அனுமதியின்றி தண்ணீர் எடுக்கும் விவசாயிகளின் மின் மோட்டார் இணைப்புகள் துண்டிக்கப்படும். மின் மோட்டார்கள் கைப்பற்றப்படும். பாதை வரி அனுமதி ரத்து செய்யப்படும். மேலும், அபராதம் ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படும்.

எனவே, பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகள் இனிமேல் தண்ணீர் எடுப்பதை தவிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...