கவுண்டம்பாளையத்தில் குடிநீர் கேட்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் போராட்டம்

கடந்த பிப்ரவரி மாதம் முதலே தண்ணீர் பிரச்சனை இருந்து வருவதாகவும், பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவும், தண்ணீர் கேட்டால் கழிவறையை பயன்படுத்தாதீர்கள், வாசிங்மெசின் பயன்படுத்தாதீர்கள் என்று அதிகாரிகள் கூறுவதாக குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்தனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியில் அரசு பணியாளர்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வசித்து வரும் இந்த குடியிருப்பில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தண்ணீர் வராத காரணத்தினால் அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.



இதையடுத்து நேற்றிரவு நூற்றுக்கும் மேற்பட்டோர் அடுக்குமாடி குடியிருப்பு வாயிலில் அமர்ந்து திடீர் உள் இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனால் இந்த பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது. வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செல்லும் நுழைவு வாயிலில் மறியலில் ஈடுபட்டதன் காரணமாக வாகனங்கள் எதுவும் உள்ளே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.



இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரச படுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தண்ணீர் வேண்டும், தண்ணீர் வேண்டும் என கைகளை தட்டி பாட்டு பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது கடந்த பிப்ரவரி மாதம் முதலே தண்ணீர் பிரச்சனை இருந்து வருவதாகவும், பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவும், தண்ணீர் கேட்டால் நீங்கள் கழிவறையை பயன்படுத்தாதீர்கள், வாசிங்மெசின் பயன்படுத்தாதீர்கள் என்றுதான் கூறுகிறார்கள். மேலும் அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பதால் தங்களால் வெளியில் இருந்து தண்ணீர் கூட வாங்கி ஊத்த முடிவதில்லை என்று கூறினர்.

இதனையடுத்து ஹவுசிங் போர்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரைமணி நேரத்தில் தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படும் என உறுதி அளித்தன்பேரில் மக்கள் கலைந்துசென்றனர். பிரச்சனை தீர்க்கப்பட்டவிட்டால் போராட்டம் தொடரும் என மக்கள் கூறியுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...