பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக ஒரு ஜோடி இரயில் சேவைகள் ரத்து – தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கோயம்புத்தூரில் இருந்து (4.4.2024) அன்று 11.55 மணிக்கு புறப்படும் ரயில் எண்.06805 கோயம்புத்தூர்-ஷோரனூர் மெமு ரயில், முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை-பாலக்காடு கோட்டத்தில், எட்டிமடை-வாளையார் ரயில் நிலையங்களுக்கு இடையே 'யானை வழிப்பாதை' அமைப்பதற்கான பொறியியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பொறியியல் பணிகளை எளிதாக்க, வரும் (04.04.2024) அன்று ஒரு ஜோடி ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று (ஏப்ரல்.1) அறிவித்துள்ளது.

அதன்படி கோயம்புத்தூரில் இருந்து (4.4.2024) அன்று 11.55 மணிக்கு புறப்படும் ரயில் எண்.06805 கோயம்புத்தூர்-ஷோரனூர் மெமு ரயில், முழுமையாக ரத்து செய்யப்படும். இதேபோல ஷோரனூரில் இருந்து (4.4.2024) 15.10 மணிக்குப் புறப்படும், ரயில் எண்.06804 ஷோரனூர்-கோயம்புத்தூர் மெமு ரயில், முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...