வாழைப்பழ காமெடி சொல்லி பெட்டராபுரம் பகுதியில் வாக்கு சேகரித்த நீலகிரி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளார் ஆ.ராசா

தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது மாநில பேரிடர் நிதியிலிருந்து 1500 கோடி ரூபாய் மட்டும் வழங்கியதாகவும், மத்திய பேரிட நிதி கேட்டபோது அதுதான் இது என வாழைப்பழ காமெடி போல நிர்மலா சீதாராமன் கூறினார் என்று வேட்பாளர் ஆ.ராசா தெரிவித்தார்.


நீலகிரி: நீலகிரி தொகுதி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக ஆ.ராசா போட்டியிடுகிறார். அவர் இன்று கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பெட்டராபுரம் மற்றும் மதம்பாளையம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய ஆ.ராசா, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு சபதம் எடுத்துள்ளதாகவும், அது தமிழ்நாட்டை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் இந்தியாவை காப்பாற்ற சபதம் எடுத்துள்ளதாகவும், நான்காவது முறையாக நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாகவும் ஒருமுறை அமைச்சராக இருந்துள்ளதாகவும், இந்த தேர்தல் நீலகிரிக்கான தேர்தலும் அல்ல, இந்த தேர்தல் தமிழ்நாட்டுக்கான தேர்தலும் அல்ல, இந்த தேர்தல் இந்தியாவிற்கான தேர்தல்.



இந்தியாவை காப்பாற்றுவதற்கான தேர்தல் எனவும், தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது மத்திய அரசிடம் நிவாரண நிதி கோரிய போதும் தரவில்லை எனவும், மாநில பேரிடர் நிதி, மத்திய பேரிடர் நிதி என இரண்டு நிதி உள்ள நிலையில் மாநில பேரிடர் நிதியிலிருந்து 1500 கோடி ரூபாய் மட்டும் வழங்கியதாகவும், மத்திய பேரிட நிதி கேட்டபோது அதுதான் இது என வாழைப்பழ காமெடி போல நிர்மலா சீதாராமன் கூறினார் என எனக்கூறி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். வாக்கு சேகரிக்க வந்த ஆ.ராசாவிற்கு அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுக்க காத்திருந்தனர். ஆ.ராசா வாகனத்தில் இருந்ததால் பிரச்சார வாகனத்திற்கு ஆரத்தி எடுத்து வாகனத்திற்கு பொட்டு வைத்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...