வாழைப்பழ காமெடி சொல்லி பெட்டராபுரம் பகுதியில் வாக்கு சேகரித்த நீலகிரி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளார் ஆ.ராசா

தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது மாநில பேரிடர் நிதியிலிருந்து 1500 கோடி ரூபாய் மட்டும் வழங்கியதாகவும், மத்திய பேரிட நிதி கேட்டபோது அதுதான் இது என வாழைப்பழ காமெடி போல நிர்மலா சீதாராமன் கூறினார் என்று வேட்பாளர் ஆ.ராசா தெரிவித்தார்.


நீலகிரி: நீலகிரி தொகுதி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக ஆ.ராசா போட்டியிடுகிறார். அவர் இன்று கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பெட்டராபுரம் மற்றும் மதம்பாளையம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய ஆ.ராசா, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு சபதம் எடுத்துள்ளதாகவும், அது தமிழ்நாட்டை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் இந்தியாவை காப்பாற்ற சபதம் எடுத்துள்ளதாகவும், நான்காவது முறையாக நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாகவும் ஒருமுறை அமைச்சராக இருந்துள்ளதாகவும், இந்த தேர்தல் நீலகிரிக்கான தேர்தலும் அல்ல, இந்த தேர்தல் தமிழ்நாட்டுக்கான தேர்தலும் அல்ல, இந்த தேர்தல் இந்தியாவிற்கான தேர்தல்.



இந்தியாவை காப்பாற்றுவதற்கான தேர்தல் எனவும், தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது மத்திய அரசிடம் நிவாரண நிதி கோரிய போதும் தரவில்லை எனவும், மாநில பேரிடர் நிதி, மத்திய பேரிடர் நிதி என இரண்டு நிதி உள்ள நிலையில் மாநில பேரிடர் நிதியிலிருந்து 1500 கோடி ரூபாய் மட்டும் வழங்கியதாகவும், மத்திய பேரிட நிதி கேட்டபோது அதுதான் இது என வாழைப்பழ காமெடி போல நிர்மலா சீதாராமன் கூறினார் என எனக்கூறி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். வாக்கு சேகரிக்க வந்த ஆ.ராசாவிற்கு அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுக்க காத்திருந்தனர். ஆ.ராசா வாகனத்தில் இருந்ததால் பிரச்சார வாகனத்திற்கு ஆரத்தி எடுத்து வாகனத்திற்கு பொட்டு வைத்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...