கோவை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து தடாகம் பகுதியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வாக்கு சேகரிப்பு

தேர்தல் முடிவடைந்ததும் முதலமைச்சரிடம் பேசி வரும் காலத்தில் எந்த பிரச்சனையும் வராத வகையில் முறையான அனுமதி பெற்று நிரந்தரமாக செங்கல் சூளைகள் நடத்த அனுமதி பெற்றுத்தருவேன் என செங்கல் சூளை உரிமையாளர்களிடம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதியளித்தார்.


கோவை: கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கோவையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கோவை தடாகம் பகுதியில் செங்கல் சூளை உரிமையாளர்களை சந்தித்து ஆலோசணை நடத்தினார்.



அப்போது அவரிடம் செங்கல் சூளை உரிமையாளர்கள் நீதிமன்ற தடையால் சீல் வைக்கப்பட்டுள்ள செங்கல் சூளைகளை மீண்டும் நடத்த அனுமதி பெற்றுத் தர வேண்டும் என செங்கள் சூளை உரிமையாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அதேபோல் அப்பகுதியில் உள்ள அ.க. தடையையும் நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.



அவர்களிடம் பேசிய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. தேர்தல் முடிவடைந்ததும் முதலைமைச்சரிடம் பேசி வரும் காலத்தில் வேறு எந்த பிரச்சனையும் வராத வகையில் முறையான அனுமதி பெற்று நிரந்தரமாக செங்கல் சூளைகள் நடத்த அனுமதி பெற்றுத்தருவேன் என உறுதியளித்தார். மேலும் இது கண்டிப்பாக தீர்வு காணக்கூடிய பிரச்சனைதான். எனவே நிச்சய் தீர்வு பெற்று கட்டுமான தொழிலை மேம்படுத்த உறுதியளிக்கிறேன் என்றார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...