கோவை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து தடாகம் பகுதியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வாக்கு சேகரிப்பு

தேர்தல் முடிவடைந்ததும் முதலமைச்சரிடம் பேசி வரும் காலத்தில் எந்த பிரச்சனையும் வராத வகையில் முறையான அனுமதி பெற்று நிரந்தரமாக செங்கல் சூளைகள் நடத்த அனுமதி பெற்றுத்தருவேன் என செங்கல் சூளை உரிமையாளர்களிடம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதியளித்தார்.


கோவை: கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கோவையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கோவை தடாகம் பகுதியில் செங்கல் சூளை உரிமையாளர்களை சந்தித்து ஆலோசணை நடத்தினார்.



அப்போது அவரிடம் செங்கல் சூளை உரிமையாளர்கள் நீதிமன்ற தடையால் சீல் வைக்கப்பட்டுள்ள செங்கல் சூளைகளை மீண்டும் நடத்த அனுமதி பெற்றுத் தர வேண்டும் என செங்கள் சூளை உரிமையாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அதேபோல் அப்பகுதியில் உள்ள அ.க. தடையையும் நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.



அவர்களிடம் பேசிய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. தேர்தல் முடிவடைந்ததும் முதலைமைச்சரிடம் பேசி வரும் காலத்தில் வேறு எந்த பிரச்சனையும் வராத வகையில் முறையான அனுமதி பெற்று நிரந்தரமாக செங்கல் சூளைகள் நடத்த அனுமதி பெற்றுத்தருவேன் என உறுதியளித்தார். மேலும் இது கண்டிப்பாக தீர்வு காணக்கூடிய பிரச்சனைதான். எனவே நிச்சய் தீர்வு பெற்று கட்டுமான தொழிலை மேம்படுத்த உறுதியளிக்கிறேன் என்றார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...