கோவை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து தடாகம் பகுதியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வாக்கு சேகரிப்பு

தேர்தல் முடிவடைந்ததும் முதலமைச்சரிடம் பேசி வரும் காலத்தில் எந்த பிரச்சனையும் வராத வகையில் முறையான அனுமதி பெற்று நிரந்தரமாக செங்கல் சூளைகள் நடத்த அனுமதி பெற்றுத்தருவேன் என செங்கல் சூளை உரிமையாளர்களிடம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதியளித்தார்.


கோவை: கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கோவையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கோவை தடாகம் பகுதியில் செங்கல் சூளை உரிமையாளர்களை சந்தித்து ஆலோசணை நடத்தினார்.



அப்போது அவரிடம் செங்கல் சூளை உரிமையாளர்கள் நீதிமன்ற தடையால் சீல் வைக்கப்பட்டுள்ள செங்கல் சூளைகளை மீண்டும் நடத்த அனுமதி பெற்றுத் தர வேண்டும் என செங்கள் சூளை உரிமையாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அதேபோல் அப்பகுதியில் உள்ள அ.க. தடையையும் நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.



அவர்களிடம் பேசிய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. தேர்தல் முடிவடைந்ததும் முதலைமைச்சரிடம் பேசி வரும் காலத்தில் வேறு எந்த பிரச்சனையும் வராத வகையில் முறையான அனுமதி பெற்று நிரந்தரமாக செங்கல் சூளைகள் நடத்த அனுமதி பெற்றுத்தருவேன் என உறுதியளித்தார். மேலும் இது கண்டிப்பாக தீர்வு காணக்கூடிய பிரச்சனைதான். எனவே நிச்சய் தீர்வு பெற்று கட்டுமான தொழிலை மேம்படுத்த உறுதியளிக்கிறேன் என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...