கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து கவுண்டம்பாளையத்தில் மாட்டு வண்டியில் சென்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பிரச்சாரம்

தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மாட்டு வண்டியில் சென்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.


கோவை: கோவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கவுண்டம்பாளையம் பகுதியில் அமைச்சர் டிஆர்பி ராஜா பிரச்சாரம் மேற்கொண்டார்.



அப்போது கட்சியினர் அவருக்கு ரோஜா மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.



பின்பு, அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் முன்னே செல்ல, அதன் தொடர்ச்சியாக மாட்டுவண்டியில் பயணம் செய்தவாறே, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.



அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.



இதனையடுத்து அப்பகுதி வடமாநிலத்தவர்கள் அமைச்சருக்கு டர்பன் அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில், இன்று (மார்ச்.30) தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மாட்டு வண்டியில் சென்று, இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து நூதனப் பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ. ரவி, திமுக மாணவர் அணி மாநில தலைவர் ராஜீவ்காந்தி, தளபதி தியாகு உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...