காங்கேயம் அருகே மடவிளாகம் ஆருத்ரா கபாலீஸ்வரர், ரகுபதி நாராயண பெருமாள் கோவில் தேரோட்டம்

2500க்கும் அதிகமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் திருவிழாவில் பாதுகாப்பு பணிகளை காங்கேயம் காவல்துறையினர் செய்திருந்தனர்.


திருப்பூர்: காங்கேயம் அருகே உள்ள மடவிளாகம் ஆருத்ரா கபாலீஸ்வரர், ரகுபதி நாராயண பெருமாள் கோவில்களில் நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது.

இதில் 2500க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இக்கோயில்களில் இந்த ஆண்டுக்கான பங்குனி மாத தேர் திருவிழா கடந்த 17ஆம் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும் 18ஆம் தேதி கொடியேற்றமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

இதில் வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் தேர், ஸ்ரீதேவி, பூமாதேவி, சமேத ரகுபதி நாராயண பெருமாள் தேர், கணபதி தேர், பிரகலநாயகி அம்மன் தேர் என நான்கு தேர் முன்னாள் செல்ல பெரிய தேரில் சோமாஸ்கந்தர் எழுந்தருளினார். ஒரு கிலோ மீட்டர் தூரம் கோவிலை சுற்றி தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் 2500 க்கும் அதிகமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் திருவிழாவில் பாதுகாப்பு பணிகளை காங்கேயம் காவல்துறையினர் செய்திருந்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...