காங்கேயம் அருகே மடவிளாகம் ஆருத்ரா கபாலீஸ்வரர், ரகுபதி நாராயண பெருமாள் கோவில் தேரோட்டம்

2500க்கும் அதிகமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் திருவிழாவில் பாதுகாப்பு பணிகளை காங்கேயம் காவல்துறையினர் செய்திருந்தனர்.


திருப்பூர்: காங்கேயம் அருகே உள்ள மடவிளாகம் ஆருத்ரா கபாலீஸ்வரர், ரகுபதி நாராயண பெருமாள் கோவில்களில் நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது.

இதில் 2500க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இக்கோயில்களில் இந்த ஆண்டுக்கான பங்குனி மாத தேர் திருவிழா கடந்த 17ஆம் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும் 18ஆம் தேதி கொடியேற்றமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

இதில் வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் தேர், ஸ்ரீதேவி, பூமாதேவி, சமேத ரகுபதி நாராயண பெருமாள் தேர், கணபதி தேர், பிரகலநாயகி அம்மன் தேர் என நான்கு தேர் முன்னாள் செல்ல பெரிய தேரில் சோமாஸ்கந்தர் எழுந்தருளினார். ஒரு கிலோ மீட்டர் தூரம் கோவிலை சுற்றி தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் 2500 க்கும் அதிகமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் திருவிழாவில் பாதுகாப்பு பணிகளை காங்கேயம் காவல்துறையினர் செய்திருந்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...