காரில் கஞ்சா பறிமுதல் - பெண்ணிடம் போலீசார் விசாரணை

சரவணம்பட்டி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மார்ச்.22 சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வாகன எண் (நம்பா் பிளேட்) இல்லாமல் வந்த ஒரு மாருதி காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் காரில் இருந்து 50 கிராம் கஞ்சா பிடிபட்டது.


கோவை: கோவை, சரவணம்பட்டி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மார்ச்.22 சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வாகன எண் (நம்பா் பிளேட்) இல்லாமல் வந்த ஒரு மாருதி காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் காரில் இருந்து 50 கிராம் கஞ்சா பிடிபட்டது. 

இதையடுத்து அந்த காரை ஓட்டி வந்த பெண்ணிடம் விசாரித்தபோது அவா் சரவணம்பட்டியைச் சோ்ந்த சுவாதி (27) என்பதும், சென்னையில் திரைப்படத் துறையில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வருவதும் தெரிந்தது. 

அவரிடம் நடத்திய தொடா் விசாரணையில் சென்னையில் இருந்து வந்திருந்த தனது நண்பா் நிசாக் என்பவரை கோவை விமான நிலையத்தில் இறக்கிவிட்டு வந்ததாகவும், அவா் அந்த கஞ்சாவை தனது காரில் மறந்து வைத்துச் சென்றிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Newsletter

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...