தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்த 6 பேர் மீது வெள்ளகோவில் காவல் நிலையத்தில் வழக்கு

சேனாபதிபாளையம் கிறிஸ்துவ தெருவில் மத வழிபாட்டுத் தலம் கட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேர்தல் புறக்கணிப்பு பேனரை வைத்த ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகோவில் அருகே பொது இடத்தில் தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்த 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

வெள்ளகோவில் கரூர் சாலையில் உள்ளது சேனாபதிபாளையம். இங்குள்ள ரேஷன் கடை அருகில் சாலையோரம், வரும் மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பு என பேனர் வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராகவேந்திரனுக்கு செல்போனில் தகவல் கிடைத்தது.

பறக்கும் படையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் சேனாபதிபாளையம் கிறிஸ்துவ தெருவில் மத வழிபாட்டுத் தலம் கட்ட கடந்த நான்கு வருடங்களாக அனுமதி கிடைக்கவில்லை. அரசும், அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இதனால் தேர்தலைப் புறக்கணிப்பதாக தெரியவந்தது. அரசுக்குச் சொந்தமான இடத்தில் மத வழிபாட்டுத் தலம் கட்ட அனுமதி கேட்டு, அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து பொது இடத்தில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த தேர்தல் புறக்கணிப்பு பேனரை அகற்றுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அகற்றாததால் அதிகாரிகளே பேனரை அகற்றி, தக்க நடவடிக்கை எடுக்குமாறு வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பேனர் வைத்ததாக சேனாபதிபாளையத்தைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 27), இசக்கி (வயது 27), சிலம்பரசன் (வயது 35), சைமன் (வயது 35), பிரவீன் (வயது 31), மேத்யூ (வயது 29) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...