தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்த 6 பேர் மீது வெள்ளகோவில் காவல் நிலையத்தில் வழக்கு

சேனாபதிபாளையம் கிறிஸ்துவ தெருவில் மத வழிபாட்டுத் தலம் கட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேர்தல் புறக்கணிப்பு பேனரை வைத்த ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகோவில் அருகே பொது இடத்தில் தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்த 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

வெள்ளகோவில் கரூர் சாலையில் உள்ளது சேனாபதிபாளையம். இங்குள்ள ரேஷன் கடை அருகில் சாலையோரம், வரும் மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பு என பேனர் வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராகவேந்திரனுக்கு செல்போனில் தகவல் கிடைத்தது.

பறக்கும் படையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் சேனாபதிபாளையம் கிறிஸ்துவ தெருவில் மத வழிபாட்டுத் தலம் கட்ட கடந்த நான்கு வருடங்களாக அனுமதி கிடைக்கவில்லை. அரசும், அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இதனால் தேர்தலைப் புறக்கணிப்பதாக தெரியவந்தது. அரசுக்குச் சொந்தமான இடத்தில் மத வழிபாட்டுத் தலம் கட்ட அனுமதி கேட்டு, அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து பொது இடத்தில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த தேர்தல் புறக்கணிப்பு பேனரை அகற்றுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அகற்றாததால் அதிகாரிகளே பேனரை அகற்றி, தக்க நடவடிக்கை எடுக்குமாறு வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பேனர் வைத்ததாக சேனாபதிபாளையத்தைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 27), இசக்கி (வயது 27), சிலம்பரசன் (வயது 35), சைமன் (வயது 35), பிரவீன் (வயது 31), மேத்யூ (வயது 29) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...