தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்த 6 பேர் மீது வெள்ளகோவில் காவல் நிலையத்தில் வழக்கு

சேனாபதிபாளையம் கிறிஸ்துவ தெருவில் மத வழிபாட்டுத் தலம் கட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேர்தல் புறக்கணிப்பு பேனரை வைத்த ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகோவில் அருகே பொது இடத்தில் தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்த 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

வெள்ளகோவில் கரூர் சாலையில் உள்ளது சேனாபதிபாளையம். இங்குள்ள ரேஷன் கடை அருகில் சாலையோரம், வரும் மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பு என பேனர் வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராகவேந்திரனுக்கு செல்போனில் தகவல் கிடைத்தது.

பறக்கும் படையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் சேனாபதிபாளையம் கிறிஸ்துவ தெருவில் மத வழிபாட்டுத் தலம் கட்ட கடந்த நான்கு வருடங்களாக அனுமதி கிடைக்கவில்லை. அரசும், அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இதனால் தேர்தலைப் புறக்கணிப்பதாக தெரியவந்தது. அரசுக்குச் சொந்தமான இடத்தில் மத வழிபாட்டுத் தலம் கட்ட அனுமதி கேட்டு, அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து பொது இடத்தில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த தேர்தல் புறக்கணிப்பு பேனரை அகற்றுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அகற்றாததால் அதிகாரிகளே பேனரை அகற்றி, தக்க நடவடிக்கை எடுக்குமாறு வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பேனர் வைத்ததாக சேனாபதிபாளையத்தைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 27), இசக்கி (வயது 27), சிலம்பரசன் (வயது 35), சைமன் (வயது 35), பிரவீன் (வயது 31), மேத்யூ (வயது 29) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...