காங்கேயம் அருகே கோயக்காடு கருப்பண்ணசாமி கோவிலில் மகா கும்பாபிஷேக பெருவிழா

இன்று காலை மங்கள இசையுடன் நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து திருக்கோயில் வலம் வந்து கோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் 3000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: காங்கேயம் அடுத்த நத்தக்கடையூர் அருகே உள்ள அத்தான் வலசு மற்றும் குட்டறை பகுதியில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் கன்னிமார் கோயக்காடு கருப்பண்ணசாமி திருக்கோயில் மற்றும் பரிவார மூர்த்திகள் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு திருவிழா இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

முன்னதாக 18ம் தேதி திங்கட்கிழமை மங்கள இசை உடன் கணபதி பூஜை, கணபதி யாகம் நடைபெற்றது. அன்று மாலை முளைபாலி பூஜை, திருகாப்புக்கட்டுதல், முதற்காலயாக பூஜை நடைபெற்றது. இதை அடுத்து 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரண்டாம் கால யாக பூஜை புண்ணியாக வாஜனம், புதிய மூர்த்தி கோபுர கலசம் அபிஷேகம், மண்டல அர்ச்சனை, வேதிகை பூஜை, துவார பூஜை, யாகத்தை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.

அன்று மாலை விஷேசந்தி புண்யாக வாஜனம் திருக்கோவில் கோபுரம் கண் திறப்பு, கருவறை தீபம் ஏற்றுதல், பாவனா அபிஷேகம், மூன்றாம் கால யாக பூஜை கோபுர கலசம் வைத்தல், திரவ்யாகுதி பூர்ண குதி பூஜை தொடர்ந்து புதிய மூர்த்தி சிலையை கருவறையில் நிலைநாட்டுதல் யாந்திரஸ் தாபனம் என் வகை மருந்து சாத்துதல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 20ம் தேதி இன்று காலை மங்கல இசையுடன் நான்காம் கால யாக பூஜை புண்ணியாக வாஜனம் புதிய மூர்த்தி சிலைகளுக்கு திருகாப்பு கட்டுதல், நாடிசந்தனம், உயிர் சக்தி கொடுத்தல், யாகம் நிறைவு, தீபாராதனை யாத்திர தானம் கலசம் புறப்பாடு திருக்கோயில் வலம் வந்து கோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து கணபதி, கன்னிமார், கருப்பண்ணசாமி பரிவாரங்களுக்கு மஹா கும்பாபிஷேக தீபாரதனை நடைபெற்றது. கும்பாபிஷேக பூஜைகளை சிவசாமி குருக்கள் மற்றும் பிரபு குருக்கள் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை அத்தான்வலசு மற்றும் குட்டறை ஊர் பொதுமக்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது. நேற்று முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் 3000க்கும் மேற்பட்ட பக்தர்களும், இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...