காங்கேயம் அருகே கோயக்காடு கருப்பண்ணசாமி கோவிலில் மகா கும்பாபிஷேக பெருவிழா

இன்று காலை மங்கள இசையுடன் நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து திருக்கோயில் வலம் வந்து கோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் 3000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: காங்கேயம் அடுத்த நத்தக்கடையூர் அருகே உள்ள அத்தான் வலசு மற்றும் குட்டறை பகுதியில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் கன்னிமார் கோயக்காடு கருப்பண்ணசாமி திருக்கோயில் மற்றும் பரிவார மூர்த்திகள் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு திருவிழா இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

முன்னதாக 18ம் தேதி திங்கட்கிழமை மங்கள இசை உடன் கணபதி பூஜை, கணபதி யாகம் நடைபெற்றது. அன்று மாலை முளைபாலி பூஜை, திருகாப்புக்கட்டுதல், முதற்காலயாக பூஜை நடைபெற்றது. இதை அடுத்து 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரண்டாம் கால யாக பூஜை புண்ணியாக வாஜனம், புதிய மூர்த்தி கோபுர கலசம் அபிஷேகம், மண்டல அர்ச்சனை, வேதிகை பூஜை, துவார பூஜை, யாகத்தை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.

அன்று மாலை விஷேசந்தி புண்யாக வாஜனம் திருக்கோவில் கோபுரம் கண் திறப்பு, கருவறை தீபம் ஏற்றுதல், பாவனா அபிஷேகம், மூன்றாம் கால யாக பூஜை கோபுர கலசம் வைத்தல், திரவ்யாகுதி பூர்ண குதி பூஜை தொடர்ந்து புதிய மூர்த்தி சிலையை கருவறையில் நிலைநாட்டுதல் யாந்திரஸ் தாபனம் என் வகை மருந்து சாத்துதல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 20ம் தேதி இன்று காலை மங்கல இசையுடன் நான்காம் கால யாக பூஜை புண்ணியாக வாஜனம் புதிய மூர்த்தி சிலைகளுக்கு திருகாப்பு கட்டுதல், நாடிசந்தனம், உயிர் சக்தி கொடுத்தல், யாகம் நிறைவு, தீபாராதனை யாத்திர தானம் கலசம் புறப்பாடு திருக்கோயில் வலம் வந்து கோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து கணபதி, கன்னிமார், கருப்பண்ணசாமி பரிவாரங்களுக்கு மஹா கும்பாபிஷேக தீபாரதனை நடைபெற்றது. கும்பாபிஷேக பூஜைகளை சிவசாமி குருக்கள் மற்றும் பிரபு குருக்கள் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை அத்தான்வலசு மற்றும் குட்டறை ஊர் பொதுமக்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது. நேற்று முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் 3000க்கும் மேற்பட்ட பக்தர்களும், இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...