துடியலூர் அருகே வட்டமலைபாளையம் ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் சைபர் பாதுகாப்பு சிறப்பு ஆராய்ச்சி மையம் தொடக்கம்

சைபர் பாதுகாப்பு சிறப்பு ஆராய்ச்சி மையத்தின் மூலம் இணைய பாதுகாப்புக் கல்வியில் சிறந்த கலாச்சாரத்தை வளர்ப்பதையும், அடுத்த தலைமுறை இணைய பாதுகாப்பாளர்களுக்கு நமது டிஜிட்டல் தரவுகளை பாதுகாக்கவும், நமது நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்க தேவையான திறன்களை மேம்படுத்துவதையும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை துடியலூர் அடுத்துள்ள வட்டமலைபாளையம் ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பாக சைபர் பாதுகாப்பு சிறப்பு ஆராய்ச்சி மையம் துவக்கப்பட்டது. தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய துவக்க விழா நிகழ்ச்சியில், தகவல் தொழில் நுட்பத்துறை தலைவர் செந்தமிழ் செல்வி அனைவரையும் வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஆர் அலமேலு தலைமை தாங்கினார். ஸ்லும்பெர்ஜர் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப மைய தலைவர் ரவிச்சந்திரன் துரைராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார். கௌரவ விருந்தினராக ஈசி கவுன்சிலின் முதன்மை கல்வியாளர் குமார் ஈஷான் கலந்துக்கொண்டு சைபர் பாதுகாப்பு மற்றும் அதன் பயன்பாடுகளை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.



இந்த சிறப்பு மையமானது, சைபர் பாதுகாப்பில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு, இன்பர்மேஷன் செக்யூரிட்டி ஆடிட் அண்ட் கோவெர்னன்ஸ், கம்ப்யூட்டர் ஹேக்கிங் போரென்சிக் இன்வெஸ்டிகேட்டர், செர்டிபைட் எதிக்கள் ஹேக்கர், செர்டிபைட் செக்யூர் கம்ப்யூட்டர் யூசர் என நான்கு முக்கியமான பாட பயிற்சித் திட்டங்கள், ஈசி கவுன்சிலின் உறுதுணையுடன் வகுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இணைய பாதுகாப்புக் கல்வியில் சிறந்த கலாச்சாரத்தை வளர்ப்பதையும், அடுத்த தலைமுறை இணைய பாதுகாப்பாளர்களுக்கு நமது டிஜிட்டல் தரவுகளை பாதுகாக்கவும், நமது நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்க தேவையான திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு, எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார். கல்லூரியின் தொழில் துறை மையத்தின் தலைவர் கணேஷ், ஸ்லும்பெர்ஜர் நிறுவனத்தின் டேலேண்ட் அக்குவிசிஷன் லீடர் ராஜேஸ்வரி, ஹேக்அப் டெக்னாலஜி நிறுவனத்தின் நிறுவனர் தினேஷ் பரந்தாங்கன், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் கிரேஸ் செல்வராணி, அர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் துறை தலைவர் கற்பகம், சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மைய பொறுப்பாளர் ஹரி, துறைத்தலைவர்கள், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு மைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...