கோவை சாய்பாபா கோவில் பகுதியில் துவங்கிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரத்தில் நிறைவு

ஆர்.எஸ்.புரத்தில் 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் அஞ்சலி செலுத்தினார்.



கோவை: கோவையில் நேற்று பாஜக சார்பில் நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். சாய்பாபா கோவில் பகுதியில் துவங்கிய இந்த ரோடு ஷோ ஆர்.எஸ்.புரத்தில் நிறைவடைந்தது.



அப்போது வழி நெடுகிலும் இருந்த பாஜகவினர் மற்றும் பொதுமக்களுக்கு கைகளை அசைத்தவாறு பிரதமர் மோடி சென்றார்.



நிறைவுப் பகுதியான ஆர்.எஸ்.புரத்தில் 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.



அவருடன் இணைந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், எச்.ராஜா பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது எஸ்.ஆர். சேகர் சிறிது நேரம் மோடியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இது குறித்து பேட்டியளித்த எஸ்.ஆர். சேகர் கோவை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி மோடியிடம் கூறியதாகவும் அப்போது மோடி அது பற்றி தனக்கும் தெரியும் என்று தெரிவித்ததாகவும் கூறினார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...