கோவை சாய்பாபா கோவில் பகுதியில் துவங்கிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரத்தில் நிறைவு

ஆர்.எஸ்.புரத்தில் 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் அஞ்சலி செலுத்தினார்.



கோவை: கோவையில் நேற்று பாஜக சார்பில் நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். சாய்பாபா கோவில் பகுதியில் துவங்கிய இந்த ரோடு ஷோ ஆர்.எஸ்.புரத்தில் நிறைவடைந்தது.



அப்போது வழி நெடுகிலும் இருந்த பாஜகவினர் மற்றும் பொதுமக்களுக்கு கைகளை அசைத்தவாறு பிரதமர் மோடி சென்றார்.



நிறைவுப் பகுதியான ஆர்.எஸ்.புரத்தில் 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.



அவருடன் இணைந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், எச்.ராஜா பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது எஸ்.ஆர். சேகர் சிறிது நேரம் மோடியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இது குறித்து பேட்டியளித்த எஸ்.ஆர். சேகர் கோவை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி மோடியிடம் கூறியதாகவும் அப்போது மோடி அது பற்றி தனக்கும் தெரியும் என்று தெரிவித்ததாகவும் கூறினார்.

Newsletter

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...