கோவை சாய்பாபா கோவில் பகுதியில் துவங்கிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரத்தில் நிறைவு

ஆர்.எஸ்.புரத்தில் 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் அஞ்சலி செலுத்தினார்.



கோவை: கோவையில் நேற்று பாஜக சார்பில் நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். சாய்பாபா கோவில் பகுதியில் துவங்கிய இந்த ரோடு ஷோ ஆர்.எஸ்.புரத்தில் நிறைவடைந்தது.



அப்போது வழி நெடுகிலும் இருந்த பாஜகவினர் மற்றும் பொதுமக்களுக்கு கைகளை அசைத்தவாறு பிரதமர் மோடி சென்றார்.



நிறைவுப் பகுதியான ஆர்.எஸ்.புரத்தில் 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.



அவருடன் இணைந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், எச்.ராஜா பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது எஸ்.ஆர். சேகர் சிறிது நேரம் மோடியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இது குறித்து பேட்டியளித்த எஸ்.ஆர். சேகர் கோவை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி மோடியிடம் கூறியதாகவும் அப்போது மோடி அது பற்றி தனக்கும் தெரியும் என்று தெரிவித்ததாகவும் கூறினார்.

Newsletter

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...