கோவை கோவில்பாளையத்தில் இரத்தினம் கல்லூரி துவக்கம்

கல்வி வளாகம் வெறும் கட்டிடமாக அல்லாமல் மாணவர்களின் கற்றல் திறனையும், சிந்திக்கும் திறனையும் மேம்படுத்தும் ஒரு இடமாக விளங்கும் என்று இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன்.ஆ.செந்தில் கல்லூரி துவக்க விழாவில் பேசினார்.


கோவை: கோவை மாநகரின் மத்தியில் 50 வருடத்துக்கும் மேலாக கல்விச் சேவையில் சிறந்து விளங்கும் இரத்தினம் கல்விக் குழுமங்கள் சார்பில் கோவில்பாளையத்தில் இரத்தினம் டிப்ஸ் குளோபல் கல்லூரி திறக்கப்பட்டது. விழாவிற்கு இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன்.ஆ.செந்தில் தலைமை தாங்கினார். இரத்தினம் கல்விக் குழுமங்களின் இயக்குனர் சீமா செந்தில், இரத்தினம் கல்விக் குழுமங்களின் செயலாளர் இரா.மாணிக்கம், இரத்தினம் கல்விக் குழுமங்களின் துணைத் தலைவர் பா.நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



விழாவில் நடிகர் ஆரி அர்ஜுனன், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன்.ஆ.செந்தில் பேசுகையில், இந்த கல்வி வளாகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கட்டிடடவியல் கல்லூரி மற்றும் மேலாண்மைக் கல்லூரி ஆகியவை ஒரே இடத்தில் அமைத்திருப்பதன் மூலம் மாணவர்களின் சிந்திக்கும் திறனும், பல பிரச்சனைகளுக்கு பல்வேறு கோணங்களில் தீர்வு காணும் திறனும் மேம்படும் என்றும், இந்த கல்வி வளாகம் வெறும் கட்டிடமாக அல்லாமல் மாணவர்களின் கற்றல் திறனையும், சிந்திக்கும் திறனையும் மேம்படுத்தும் ஒரு இடமாக விளங்கும் என்று கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...